April 27, 2014

Kanampulla Nayanar - Nayanmar 46

Kanampulla Nayanar (Courtesy: Shaivam.org)


The Lord who cures the bonds of births apart from the diseases the body accumulates, that Great Lord's holy place is irukku vELUr; present called as "Pelur" (6-kms from Vazhappadi in Salem District). With its huge temple and tall tower calling the seekers from all over to come and get the relaxation under the Holy feet of Lord shiva with the consort Aramvalarthanayaki.


Our Nayanar was born in that place, owner of limitless wealth, renowned for his peerless good principles. He had a great desire for the Lord who burnt the deva of desire like a piece of straw. He found that the feet of the Flawless Absolute is the real wealth. He further found the best feature of the wealth one can have - illuminating the abode of the Luminous Lord who has three lights as His eyes. Decorating His holy place with nice lamps, he used to worship the God with falling body in raising love, singing the endless fame of the Limitless Lord. With the love of saluting the Lord of Elements, that dances in the dais of thillai, he went to chithambaram. With his spring of devotion dancing in his heart to the rhythm of the dance of the Lord, he prostrated to the Great Lord. He then started living in thirup puliichcharam continuing his service of illuminating the place of the Lord.

His holy service continued in spite of whatever hurdles he faced. He sold the household articles one by one and lit the lamps in the abode everday with pleasant ghee. Then came the situation when there was nothing left in the house to sell ! He was not convinced to beg to somebody. That once prominent rich man, who was still wealthy with the never dying love for the Lord who conquered death, but had no money in hand, toiled to cut the straws(kaNampul) in the fields and sold it to others. With the money he got in return that blotless famed devotee bought the pure ghee and burnt the lamps in the temple. One day he could not sell the straws he brought in spite of all his efforts. He had nothing else in his hand ! Still not withdrawn from the sacred service he undertook to do, he went ahead burning the straws to illuminate the temple. As the stacks of impurities gets burnt soon when the devotion for Lord shankara enters, all the straws he had brought got over soon and he required more to illuminate the temple. That true lover of God unwilling to stop the service even that time, put his own hair in place of the straw and started burning it - burning the cause of the two types of deeds !! Our Love, the Lord, appreciating the flawless love of the n^AyanAr, kaNampullar sat in the place of Lord shiva, blissfully saluting Him. Let the strong rock like determined devotion with which kaNampulla n^AyanAr started even burning his head for the lamp, stay in the mind.

thaN^kaLpirAn thiruvuLLany cheydhuthalaith thiruviLakkup ,
     poN^giya an budan eriththa poruvilthiruth thoNdarukku ,
     maN^galamAm peruN^karuNai vaiththaruLach chivalOkaththu ,
     eN^kaLpirAn kaNampullar inidhiRainychi amarn^dhirun^dhAr


கணம்புல்ல நாயனார் 
Courtesy: Dinamalar.com
Temple images

வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவராய் வாழ்ந்தவர் கணம்புல்ல நாயனார் என்னும் சிவனருட் செல்வர். இத்தவசீலர் திருசடைநாதர் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்றும் நற்பணியை நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார்.கோயில்களுக்கு ஒளி ஏற்றுவதால் இருளடைந்த மானிடப்பிறவி என்னும் அஞ்ஞான இருள்நீங்கி அருளுடைய ஞான இன்ப வீட்டை அடைய வழி பிறக்கும் என்பதனை உணர்ந்தார்.இவ்வாறு நற்பணி செய்து வந்த நாயனாருக்குச் செல்வம் குறைந்து வறுமை வளரத் தொடங்கியது. அந்த நிலையிலும் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.இந்த நிலையில் நாயனார் இருக்குவேளூரில் வறியராய் இருக்க விரும்பவில்லை. தம்மிடமுள்ள நிலபுலன்களை விற்று ஓரளவு பணத்தோடு சிவ யாத்திரையை மேற்கொள்ளுவான் வேண்டி ஊரை விட்டே புறப்பட்டார். ஊர் ஊராகச் சென்று கோயில் தோறும் நெய் விளக்கேற்றியவாறு தில்லையை வந்தடைந்தார்.எம்பெருமானைப் பணிந்து பேரின்பம் பூண்டார். தில்லைப்பதியை விட்டுச் செல்ல மனமில்லாத அடிகளார் அவ்வூரில் தனியாக வீடு எடுத்து வசிக்கலானார்.

அடியார் அவ்வூரில் தங்கியிருந்து பெருமானை உளம் குழைந்து உருகிப் போற்றி விளக்கேற்றும் திருப்பணியை மேற்கொள்ளலானர். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட அடியார் வறுமையால் மனம் வாடினார். விற்பதற்குக் கூட மேற்கொண்டு மனையில் பொருள் இல்லையே என்ற நிலை ஏற்பட்டதும் நாயனார் ஊராரிடம்  இரப்பதற்கு அஞ்சிய நிலையில் உடல் உழைப்பினால் செல்வம் சேர்க்கக் கருதினார். அதற்கான கணம்புல்லை அரிந்து வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார். எம்பெருமான் சோதனையால் கணம்புல்லும் விற்பனையாக வில்லை. இதனால் இடர்பட்ட நாயனார், கணம்புல்லையே  திரித்து அழகிய விளக்காக எரித்தார். ஆலயங்களில் விளக்குகள் பெரும்பாலும் ஜாமம் வரைக்கும் எரிவது வழக்கம். கணம்புல் யாமம் வரைக்கும் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிட்டது. கணம்புல் நாயனார் அன்புருகும் சிந்தனையுடன் என்புருக அத்திரு விளக்கில் தமது திருமுடியினை வைத்து இன்பம் பெருக நமச்சிவாய நாமம் என்று சொல்லி விளக்காக எரிக்கத் தொடங்கினார்.திருப்புலீச்சரத்து மணிகண்டப் பெருமான் அதற்கு மேல் பக்தரைச் சோதிக்க விரும்பவில்லை. பெருமான் பக்தருக்கு சக்தி சமேதராய் ரிஷப வாகனத்தில் பேரின்ப காட்சி கொடுத்தார். அடியார் நிலம் கிடந்து சேவித்து, பெருமானைப் போற்றினார். எம்பெருமான் தமது அன்பு தொண்டர் கணம்புல்ல நாயனாருக்குச் சிவலோகப் பதவியை அளித்து அருளினார்.
குருபூஜை: கணம்புல்லர் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கணம்புல்ல நம்பிக்கு அடியேன்.


கணம்புல்ல நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

அன்பில் அதீதநிலை ஒரோவழி ஆசார விதிமீறற்கும் உள்ளாதல்

திருக்கோயிலிற் செய்யத் தக்கன யாவை செய்யத்தகாதன யாவை என்றவரையறையும் செய்யத்தக்கனவற்றை ஆசாரம் எனத் தழுவுதலும் செய்யத்தகாதனவற்றை அநாசரம் என விலக்குதலுமாகிய கடைப்பிடிகளுஞ் சைவத்திற் பிரதானமானவைகளாம். சரியை கிரியை நெறிகளில் நிற்பார்க்கு அவை மிகக் கண்டிப்பான விதிகளாதல் சைவசமய நெறி முதலிய உண்மை நூல்களாற் பெறப்படும். எனினும், இறைவன்பால் தமக்குள்ள அத்தியந்த உறவுணர்வாகிய மெய்யுணர்வு தலைப்பட்டு அதில் அதீதநிலை யெய்திய மேலோர்கள் விஷயத்தில் ஒரோவழி அவை விதிவிலக்கு நிலைக்குள்ளாதலும் அவர் வரலாறுகளிற் காணப்படும். உச்சிட்ட நீரால் அபிஷேகித்தல் உச்சிட்ட உணவால் நைவேத்தியஞ் செய்தல் முதலிய அநாசார விதிகளாற் பூசை செய்து முத்திப் பேரின்பமுற்ற கண்ணப்ப நாயனார், மென்மலரால் அர்ச்சிக்கற் பாலதாகிய சிவலிங்கத் திருமேனியை வன்மலராகிய கன்மலரால் அர்ச்சித்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார், திருவிளக்குத் தகழியை உடலுதிரத்தால் நிரப்பித் திருவிளக்கேற்ற முயன்று சிவன் கருணைக்காளாகிப் பேரின்ப நிலையுற்ற கலிய நாயனார் முதலானோர் வரலாறுகளினால் அது புலனாகும். திருக்கோயிலில் மயிர்கோதுதலே அநாசாரம் என்பது விதியாகவும் தமது தலைமுடியையே எரிபொருளாக திருவிளக்குத் தகழியிலிட்டுத் திருவிளக் கெரித்த கணம்புல்ல நாயனார் செய்தியும் இவ்வகையினதாகவே கொள்ளப்படும்.
சிதம்பரத்திலுள்ள திருப்புலீச்சரம் என்னும் ஆலயத்தில் திருவிளக்கேற்றுந் தொண்டிலீடுபட்டிருந்த இந்த நாயனார், அதற்குபகாரமாய் நின்று நிலவிய தமது சொத்து வளம் அற்றொழியவே, அரிதின் முயன்று கணம்புல் என்ற ஒருவகைப்புல்லைத் தேடி அரிந்து சுமந்து திரிந்து விற்று வந்த பொருள் கொண்டு அது செய்வாராயிருந்த காலை, ஒருநாள், அக்கணம்புல் எத்துணைப் பிரயாசம் பண்ணியும் விற்கப்படாதொழியவே, வேறு வழி காணாது அப்புல்லையே திருவிளக்குத் தகழிகளில் மாட்டி எரிப்பாராயினர். முன்னைநாள்களிற் செய்தது போல அன்று யாமந்தோறும் எரிக்கப் புல் போதாக் குறையாகிவிடவே, எப்படியாவது தொடர்ந்து வழக்கம்போல் விளக்கெரித்துத் தம் தொண்டுறுதி காக்குந் துணிபினால் தமது தலைமுடியையே அரிந்து விளக்குத் தகழிகளில் மாட்டி எரித்து அது வாயிலாகச் சிவலோகத்திற் சிவனைத் தொழுதிறைஞ்சியிருக்கும் பெரும் பேறு பெற்றுய்ந்தார். அது அவர் புராணத்தில், "இவ்வகையாற் றிருந்துவிளக் கெரித்துவர வங்கொருநாண் மெய்வருந்தி யரிந்தெடுத்துக் கொடுவந்து விற்கும்பு லெவ்விடத்தும் விலைபோகா தொழியவுமிப் பணியொழியா ரவ்வரிபுல் லினைமாட்டி யணிவிளக்கா யிடவெரிப்பார்" - "முன்புதிரு விளக்கெரிக்கும் முறையாமங் குறையாமன் மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமை மெய்யான வன்புபுரிவாரடுத்த விலக்குத்தந் திருமுடியை யென்புருக மடுத்தெரித்தா ருருவினையின் றொடக்கெரித்தார்" - "தங்கள்பிரான் றிருவுள்ளஞ் செய்துதலைத் திருவிளக்குப் பொங்கியவன் புடனெரித்த பொருவிறிருத் தொண்டருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளச் சிவலோகத் தெங்கள்பிரான் கணம்புல்லரினிதிறைஞ்சி யமர்ந்திருந்தார்" என வரும்.
தகழியி லிட்டது எண்ணெயோ தலைமயிரோ என்பதல்ல, அவா மெய்யான அன்பு புரிவாராய்ப் பொங்கிய அன்பினில் என்புருக மடுத்தெரித்த விசேடமே அவர் செயலின் அந்தரங்க விசேடமாதலும் அதற்கு இன்றியமையாது வேண்டப்படும். அவரது ஆத்மிக உயர்பண்பு. அவர் இருவினையின் தொடக்கெரித்தார் என்றதனால் உய்த்துணரக் கிடத்தலும் செயல் குற்றமோ நற்றமோ என்ற விசாரமின்றி, அவர் அன்புறுதியைச் சிவபிரான் திருவுளஞ் செய்து மங்கலமாம் பெருங்கருணை புரிந்திருத்தலும் இவர் வரலாற்றுண்மைச் சிறப்புக்களாக வைத்துணரப்படும். அதுபற்றி யன்றே மெய்யடியார்பால் விளங்கும் அன்புறுதி நோக்கில் அவர் குற்றமுங் குணமாக் கொள்ளும் சிவனாரின் பரத்துவ விலாசத்தைத் தமது தேவாரத் திருப்பாட லொன்றிற் போற்றிப் புனையுஞ் சுந்தர மூர்த்தி நாயனார் அதற்கெடுத்துக் காட்டாகப் பெயர்சுட் டியுரைக்கும் நாயன்மார் எண்மருள் இந்த நாயனாரும் இடம்பெறலாயினார் என்க. அத்திருப்பாடல், "நற்றமிழ்வல்ல ஞான சம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப் போவானுங் கற்ற சூதனற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ்செய்யினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன் பொற்றிரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன் கூருளானே" என வரும்.
திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment