September 05, 2014

Names of 63 Saints




 
1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar
(கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமை காலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.)


2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanar
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழு நம்பிகையுடன் அனுப்பியவர்.


3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanar
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர். தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர். 


4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanar
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும் தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்.


5.விறல்மிண்டர்/Viralminda Nayanar
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.


6.அமர்நீதியார்/Amaraneedi Nayanar
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.


7.எறிபத்தர்/Eripatha Nayanar
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின், தவறு செய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத் துணிந்தவர்.


8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanar
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர். 


9.கண்ணப்பர்/Kannappa Nayanar
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால், மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.


10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanar
சாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.


11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanar
மறுநாள், தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.


12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanar
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத் துணிந்தவர்.


13.ஆனாயர்/Anaya Nayanar
புல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.


14.மூர்த்தி/Murthi Nayanar
சந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்


15.முருகர்/Muruga Nayanar வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். 


16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanar
கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanar
 
தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல் கொண்டவர்.
18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar 
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்த நேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanar
 
சிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar
 
தேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar
சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar
 
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க, பேய் வடிவம் எடுத்தவர்.  சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப் பெற்றவர்.  அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar
 
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின், இறந்த மகன், சிவன் அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal
தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandar
 
ஞானக் குழந்தை.  பல அற்புதங்கள் செய்தவர்.  பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்ட பேறு பெற்றவர்.  அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர்.  சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar
இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய் பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula Nayanar
திருமந்திரம் பாடியவர்.  நந்தி எம்பெருமானின் மாணாக்கர்.  சித்தர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar
கண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவ அருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanar
சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்

32.சோமாசிமாறர்/Somasira Nayanar
நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya Nayanar
அன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanar
சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

37.கணநாதர்/Gananatha Nayanar
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanar
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன் சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar
எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து, தன் உயிரை விட நினைத்த மன்னர்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanar
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒரு பொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanar
வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசு இல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanar
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar
மன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanar
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

47.காரி/Kari Nayanar
காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar
திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanar
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வு என்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும் திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வு பெற்றார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar
அரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanar
அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanar
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar
வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanar
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanar
பொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலை விட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar
சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.  நின்ற சீர் நெடுமாறனின் மனைவி.  அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவ மதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்/Nesa Nayanar
எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய் பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானியார்/Isaijnaniyar
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar
தேவாரம் பாடியவர்.  சிவ பெருமானின் தோழர். 


Home  Previous                                                                     
                                                            Next

No comments:

Post a Comment