April 26, 2014

Adipaththar Nayanar - Nayanmar 41




 Adipaththar Nayanar - அதிபத்த நாயனார்

 

He was a sincere devotee of Lord Shiva and lived in the Chola Kingdom at present day Naagapattinam (referred in sangam literature as Naagai) by the sea shore. 

He was the head of his group of people called Paradhavar. The main source of income and food for them was fish gotten from the sea.  As a way of expressing love to God Siva, Adipatthar would toss the very first fish he earned every day back into the sea, dedicating to God. He would practice this ritual even if he got just one fish on a day, thereby deciding to stay hungry for the entire night. Chekkizhar's Periya Puranam about Adipatthar:

" The head of Paradhavars who lived in the shores of Nagai touched by waves, Adipatthar dedicated the first fish he received in his net to God every day. Once for several days he received just one fish which he left back to sea for God. He then got a big golden fish one day which he gave to God happily and thus attained Lord forever"

The dancing God of golden court  decided to test his love and patience. Therefore, Adipatthar started to get just one fish for many consecutive days. Even then, the ardent devotee left them back to sea happily saying "Let this be to Thy who is our father and Mother". As a result, Adipatthar started becoming more and more poor. Days passed in the same way and one day his clan saw a miracle. They got a big golden fish filled with nine types of gems in their net. Adpatthar admired the fish and told "This wonderful fish shines  like the Sun. It is the first one we got today and we are blessed to give it back to Shiva". He then left it back to the sea. Having felt his sincere love, the Lord who wears the crescent descended from the sky and blessed Adipatthar and his people saying "Let you and your people be with me forever". Adipatthar thus attained the glorious place near God Himself.

அலையாருங் கடனாகை நகருள் வாழு
    மதிபத்தர் பரதவர்க ளதிபர் வேலை
வலைவாரி வருமீனிற் றலைமீ னீசன்
    வார்கழற்கே யென்றுவிடு மரபார் பன்னாட்
டலையான தொருமீனே சார நாளுந்
    தந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொ
னிலையாரு மணிநயத்த மீனொன் றெய்த
    நீத்தருளா லிறைவனடி நேர்ந்து ளாரே.

அதிபத்த நாயனார்


Temple images
சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.
குருபூஜை: அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
கடல் நாகை அதிபத்தர்க்கு அடியேன்.


அதிபத்த நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சிவதொண்டிற் பயின்று சிவனைச்சேரும் வாய்ப்பு எவர்க்கும் முளதாதல்


தானே முதலாந் தனிமுதல்வன் ஒருவனாலன்றி உலகம் இயலுமாறில்லை. அம்முதல்வனுஞ் சிவனலாதில்லை என்ற உணர்வும் அவ்வுணர்வின் வழிநிகழுஞ் சிவதொண்டும். பூர்வபுண்ணியப் பேறாக மனமாக நீங்கி மெய்யுணர்வு தலைப்படும் நிலையுடையார் யாவர்க்கும் பொதுவாம். அது அவ்வாய்ப்புறுவார் எக்குலமரபில் இருக்கும்போதும் ஏற்படலாம்; எத்தொழில் மரபில் இருக்கும் போதும் ஏற்படலாம் என்பதும் அத்தகுதிபெறும் அவ்வவர்க்கு அவரவர் குலமரபு தொழில்மரபுகளுக் கடங்க நின்றே சிவதொண்டி லீடுபடும் மார்க்கம் அங்கங்குளதென்பதும் அவரவர் கன்மாநுசார ரீதியாக அவர்களைப் படிமுறையா லீடேற்றும் நோக்கில் குலமரபு தொழில்மரபுகளை விதிப்பதுஞ் சிவனே. அவ்வவருடன் நின்று அவரவர் பரிபக்குவத்திற் கேற்ப அவரவர்க்குத் தோன்றியுந் தோன்றாமலுஞ் செயற்படுத்திக் கொண்டிருப்பதுஞ் சிவனே யாதலால் ஏதொரு தாழ்மரபில் நிற்கையிலும் ஒருவர்க்கு மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவனுணர்வும் சிவதொண்டும் நிகழ்தற்கு அம்மரபு தடைக்கல்லாதல் பொருந்தாதென்பதும் சைவஞான உண்மைகளாம் (சைவத்தின் அகில மளாவிய தன்மையும் இதில் வைத்தே உணரப்படுவதாகும்). தத்தம் குலமரபு தொழின் மரபுகளுக்கேற்பவே சிவாலய சேவைக்குக் கோரோசனை பேரிகையாதியன தருதல், சிவனடியார்க்கு உண்கலமாந் திருவோடு வழங்குதல், சிவனடியார்க்குத் துணிவெளுத்துதவுதல், சிவன் புகழை யாழிலமைத்து வாசித்தல் என்ற சிவதொண்டுகளாற்றி முத்திப் பேரின்ப முற்றோராக முறையே வரும் திருநாளைப்போவார் நாயனார் திருநீலகண்ட நாயனார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் வரலாறுகளால் அவ்வுண்மை வலுவுறுவதாகும்.

இங்ஙனமாதற் கேற்ப, பரதகுலத்தினராய் வலைத்தொழில் மரபினராயிருக்கும் நிலையிலேயே மெய்யுணர்வு தலைப்பட்டுச் சிவபக்தி மேலோங்கிச் சிவதொண்டிலீடுபடும் நல்வாய்ப்புப் பெற்றுள்ளோர் அதிபத்த நாயனார். அவர் தமது தொழின்மரபுக்குட்பட்ட மீன்பிடித்தலினூடாகவே சிவதொண்டுக்கும் வகையொன்று கண்டுகொண்ட விவேகம் மஹத்தானதாகும். அவர் தினசரி தம் ஏவலர்கள் கடலிற் போட்டிழுக்கும் வலையில் அகப்படும் மீன்களில் முதன்மையானதொன்றைக் கொல்லாது இது நட்டமாடிய நம்பருக்கு" எனக் கூறி அன்பாதரவாக மீளவும் அதனைக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டிருந்தார். திருவருட் செயலாக ஒரு காலகட்டத்தில், பல நாள் தொடர்பாக ஒரேயொரு மீன்மட்டும் அவர் வலையிற் படுவதாயிற்று, அதனையும் பக்தி பூர்வமாகச் சிவனுக்கென்றே கடலில் மீளவிட்டு விடுவதனால் தம் ஏவலர்களுடன் தாமும் பசி பட்டினியால் தளர்ந்து வாடும் நிலை யெய்தியபோதும் அவர்தம் தொண்டுநிலையில் தளர்ந்திலர். இவரது இத்தொண்டுறுதியின் அழுத்தத்தை இன்னுஞ் சற்று ஏறவிட்டுக் காணும் திருவுளச் செயலாக ஒருநாள் அவயவங்களெல்லாம் நவரத்தினங்களாலமைந்த பொன்மீனொன்று முன்னைய தனிமீனுக்குப் பதிலாக அவர் வலையில் அகப்படுவதாயிற்று. சூரியப் பிரகாசமாக விளங்கும் அவ்வற்புத மீனைக் கண்டதும் பேரானந்தமுற்றவராய் இத்தகைய அரிய மீன் சிவனுக்கே உரித்தாந் தகுதியுள்ளது எனக் கொண்டு, "சென்று சேர்க சிவன்கழற்கே" எனக் கூறிக்கரையெற்றி மீளும் அலையோடு மீளுமாறு அதனைத் தள்ளி விட்டருளினார். சோதனை இனிப்போதும் எனத் திருப்தியுற்றவர்போல் சிவபெருமான் அப்பொழுதே ஆகாயத்தில் இடபாரூடராய்த் தோன்றி அவர்க்குச் சிவலோகப் பெருவாழ்வு தந்தருளினார். இந்நிகழ்ச்சி அவர் புராணத்தில், "ஆன நாளொன்றி லவ்வொரு மீனுமங் கொழித்துத் தூநிறப்பசுங் கனகநற் சுடர்நவமணியால் மீனுறுப்புற அமைந்துல கடங்கலும் விலையாம் பான்மை அற்புதப் படியதொன் றிடுவலைப் படுத்தார்" - "என்று மற்றுளோரியம் பவு மேவுசீர்த் தொண்டர் பொன்திரள் சுடர் நவமணி பொலிந்த மீனுறுப்பால் ஒன்றும் மற்றிது என்னை ஆளுடையவர்க்காகும் சென்று பொற்கழல் சேர்கெனத் திரையொடுந் திரித்தார்" - "அகிலகோகமும் பொருள் முதற்றா மெனுமளவில் புகலுமப்பெரும் பற்றினைப் புரையற வெறிந்த, இகலில் மெய்த்திருத் தொண்டர் முன் இறைவர்தாம் விடைமேல் முகில்விசும்பிடை அணைந்தனர் பொழிந்தன முகைப்பூ" என வரும்.

பற்றும் பற்றுக்கள் யாவினுக்குந் தலைப்பற்றாகப் பொருட் பற்றையே பற்றும் பாங்குள்ள இவ்வுலகில் அதனைத் துச்சமாக மதித்துத் துடைத்தெறிந்தவர் என இந்த நாயனார் மகிமையை மேல் இறுதிச் செய்யுளில் சேக்கிழார் நாயனார் போற்றிப் புனைதல் குறிப்பிடத்தகும். மறத்தொழில் எனவே மதிக்கப்படும் வலைத்தொழிலுள்ளுஞ் சிவ தொண்டின்சீலம் விளக்கமுற நின்றவாறும் தம்மவருடனான தமது சீவனோபாயமே கேள்விக்குரியதாயிருந்த கட்டத்தில் உலகமெலாம் விலைபோகக்கூடிய பொன்மீன் கிடைக்கவும் அத்தகைய உயர்பொருள் ஆவசியமாகச் சிவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டாக வேண்டுமென்ற பக்தி வைராக்கியசீலம் புலப்பட நின்றவாறும் இந்த நாயனாரின் தொண்டுறுதி விசேடங்களாக அறிந்து கடைப்பிடிக்கத்தகும்.


திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment