June 25, 2014

Pukazththunai Nayanar - Nayanmar 54

54. Pukazththunai Nayanar

Courtesy: Shaivam.org

In the town cheRuvilipuththUr came in the tradition of priests worshiping Lord Shiva was the devotee pukazththuNaiyAr. He had sticked with the paste of devotion the perennial feet of Lord of un-measurable fame to his lotus of heart. He did the ritualistic worship given life by the non stopping stream of love everyday. His worship was the expression of his knowledge, a penance by itself, an expression of supreme devotion for the Supreme that stops thega.nga in a tiny portion of Its matted hair. That time there was a big famine in that area. While others leave for greener pastures, our n^AyanAr rejected any such decision saying, "I will not leave my Lord, come whatever be". Though the land became dry his heart was still wet as ever for the anointment of the Lord who is pleased by the cool water. It is rightly said, even if the five elements of the Universe go out of their way, the true devotees who live in their heart with Lord shiva always, do not get disturbed.


Even in that famine period n^AyanAr brought the best of available flowers and anointed the Lord with the cold water. What else does the Great Lord who goes on alms require other than this cold water that represented an extreme love that wanted to take care of Him under any circumstance ?! The God who is always anointed by the cosmic river ga.nga, delightfully sat in his heart and that abode. The mind was always willing to serve, but the body ? It was in the peak of fatigue because of the days of starvation. One day when he brought the water for holy anointment, he could not control and fell down putting the pot of water on the Lord's head. As he slept there itself by the God's grace, he was told by the Lord in his dream that he would be given one coin everyday till the land gains back its prosperity. He woke up and saw with the body that had gone lean and vigourless, a coin kept on the altar of the abode. His face blossomed thanking the mercy of mahAdEva.

He got the coin there everyday. With the sickness of hunger driven away, he served the devotees of the Bull flagged Lord paving way for the generations to follow him. With the dEvadEva always bathed in his worship, he reached the cool feet of the Lord of pArvati. Let the mother like love and dedication in serving the Deathless Lord of pukazththuNai n^AyanAr stay in the mind.


thaN^kOnaith thavaththAlE thaththuvaththin vazipadun^AL ,
  poN^kOdha nyAlaththu vaRkadamAip pachipurin^dhum ,
  eN^kOmAn thanaividuvEn allEn en RirAppagalum ,
  koN^gArpan malarkoNdu punalkoN daruchchippAr

Temple images
Courtesy: Dinamalar
புகழ்த்துணை நாயனார்

செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர். ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார். எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து  அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.
குருபூஜை: புகழ்த்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்.

புகழ்த்துணை நாயனார் புராண சூசனம்

பண்டிதர் மு. கந்தையா எழுதியது

சலிக்காதியலும் அகத்தடிமைக்கு நேரும் விக்கினத்தைத் திருவருள் வெளிப்பட்டு விலக்குமெனல்

திருக்கோயிலில், உடற்புறவுறுப்புக்களைச் சிவநெறி நிற்கப் பயிற்றுமாறு உள்ளன்பாற் செயுந் திருவலகிடல், திருமெழுக்கிடல் முதலான சரியைத் தொண்டுகள் புரியும் நிலை புறத்தடிமை நிலையென்றும் அகவுறுப்பாகிய மனம் புத்தி முதலியவற்றைச் சிவநெறி நிற்கப் பயிற்றுமாறு உள்ளன்பாற் செய்யும் அபிஷேகம் அர்ச்சனை ஆதிய கிரியைத் தொண்டுகள் புரியும் நிலை அகத்தடிமை நிலையென்றும் பெயர்பெறும். திருக்கோயிலின் அகத்துக்ககமாகிய கர்ப்பக் கிருகத்தில் நிகழ்தல் பற்றி மட்டுமன்று, புறவுறுப்புக்களின் நேர்பாட்டைவிட அகவுறுப்புக்களின் நேர்பாடே முக்கியத்துவம் பெறுதலானும் அகத்துக்ககமாயிருக்குஞ் சிவனை அகமுயற்சியாலணுகும் பாங்குள்ளதாயிருத்தலானும் பின்னையது அகத்தடிமை என்றாயிற்று. அது, "அகம்படிகின்றநம் ஐயனை யோரும் அகம்படி நின்றவர் அல்லலிற் சேரார்" என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும். அன்றியும் இவ்வடிமைத் தொண்டு அணுக்கத்தொண்டு எனவும் சிதம்பரத்தில் நடராசமூர்த்தி சந்நிதிவாயில் திருவணுக்கன் திருவாயில் எனவும் வழங்குதல் கொண்டும் அது அவ்வாறாதல் துணியப்படும். இந்த அகத்தடிமை நெறி நிற்றலும் அடியார் தொண்டு நெறிகளில் ஒன்றாதல், குறித்த திருமந்திரம் அடியார் பெருமை என்ற பகுதியில் இடம் பெற்றிருத்தல் கொண்டே அறிதற்பாலதாம்.

எந்த ஓர் ஆன்மாவாயினும் தன் புறவிருத்திகள் அருகப்பெற்று அகவிருத்தியில் முன்னேறி அகம்படியாயிருக்குந் தன்னையுணரவருந் தருணத்தை எதிர்நோக்கியிருத்தலே தனது ஒரே பராக்காகக் கொண்டுள்ள சிவனும் அணுக்கத் தொண்டாகிய இவ்வகத்தடிமைக்கு மகிழ்ந்து வெளிநின்றருளுதல் இயல்பேயாம். அது, "புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணலது கண்டருள் புரியா நிற்கும்" எனவும் "பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்கரன் தானே பயிலும்" எனவும் வருந் திருமந்திரங்களால் விளங்கும்.

பூர்வ புண்ணிய வசத்தினால், சிவனை அணுகுதற்கு உற்ற அணுக்கநெறியாகிய இவ்வகத்தடிமை நெறியிலேயே நிற்பாராயினர் புகழ்த்துணை நாயனார். நாட்டிற் கொடும்பஞ்சந் தோன்றியதால் உணவொன்றுமின்றி உடல் முற்றாக வரண்டு சோர நேர்ந்த நிலையிலும் அவர்தம் அபிஷேக அர்ச்சனை உறுதியிற் சலித்திலர். அந்நிலையில், ஒருநாள் அபிஷேகக்குடந் தாங்குமளவுக்கு வலுவில்லாது கை சோர்ந்து விடவே குடம் வழுவிச் சுவாமி தலையில் விழும்படி ஆயிற்று. இயல்பான உடல் தளர்ச்சிச் சோர்வுக்கு மேலும் "ஆ அபசாரம் நிகழ்ந்து விட்டதே" என்ற உள்ளத்தளர்ச்சிச் சோர்வுங்கூட ஒருங்கே மயங்கி உறக்கநிலை எய்திவிடுகிறார் நாயனார். "தொண்டர்க்குத் தூநெறியா நின்றான் தன்னை" எனவும் "தூநெறிக்குத் தூநெறியாய் நின்றான்" எனவும் "தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியினார்" எனவும் "தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்" எனவும் வரும் அப்பர் சுவாமிகள் கூற்றுகளுக்கேற்ப, தன்னடியார்களின் தொண்டு நிகழ்ச்சி இடையூறு படுமாறு வரும் விக்கினங்களைப் போக்கி அவர்களை அந்நெறியில் தொடர்ந்தியலவைத்தல் சிவன் காருண்ய இயல்பாம். அதற்கிணங்க அப்போது சிவபிரான், உறக்கநிலையிலிருந்த நாயனாரின் கனவில் தோன்றி, நின் தொண்டுக் கிடையூறாக நிற்கும் பஞ்சவேதனைக் கிடையூறாம்படி நித்தம் ஒவ்வோர் பொற்காசு தருவோம்; நம் பீடத்தின் கீழ்க் கண்டெடுத்துக் கொள் என அறிவித்தருளினார். அது அவர் புராணத்தில், "தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுவார் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும் எங்கோமான் தனைவிடுவே னல்லேனென்றிராப்பகலுங் கொங்கார்பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டர்ச்சிப்பார்" - "மாலயனுக் கரியானை மஞ்சனமாட்டும் பொழுது சாலவுறு பசிப்பிணியால் வருந்தியே தளர்வெய்திக் கோலநிறை புனல்தாங்கு குடந்தாங்க மாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்" - "சங்கரன்ற னருளாலோர் துயில்வந்து தமையடைய அங்கணனுங் கனவின்க ணருள்புரிவா னருந்துணவு மங்கியநாள் கழியளவும் வைப்பது நித்தமு மொருகா சிங்குனக்கு நாமென்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்" என வரும்.

பஞ்சநிலைமையால் முற்றாகத் தஞ்சங்கெட்டுத் தளர்ந்த நிலையிலும், "எங்கோமான் தனை விடுவே னல்லேன்" என்ற துடிப்புடன் அபிஷேகார்ச்சனைகள் பண்ணி வந்த இந்த நாயனாரின் தொண்டுறுதி நேர்மையும் பிரத்தியேகமான முறையில் அவர்க்கு நித்தியப்படியாகப் பொற்காசு வழங்கி அவர் தொண்டுறுதி கடைபோக அருளிய சிவபிரான் கருணைத் திறமும் உற்றுணர்ந்து போற்றற்பாலனவாம். இந்நிகழ்ச்சியைத் தாம்பாடுந் தேவாரமொன்றி லேற்றி, "அகத்தடிமை செய்யும் அந்தணன் தான் அரிசிற் புனல் கொணர்ந் தாட்டுகின்றான் மிகத் தளர்வெய்திக் குடத்தையும் நும்முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற்படியும் வருமென்றொரு காசினை நின்ற நன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர் பொழிலார் திருப்புன்கூர்ப் புனிதனீரே" எனச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் போற்றித் துதித்துள்ளமையானும் அது அவ்வாறாதல் பொருந்தும்.

திருச்சிற்றம்பலம்.

Home  Previous                                                                    
                                                           Next

No comments:

Post a Comment