January 31, 2016

Kamala Muni Siththar - Part 5

கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்; இரசவாதம் வியப்பான தகவல்கள்


கஞ்சமலை சித்தர் கோயிலில் தங்கம்;


சேலம் மாநகரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சமலை எனப்படும் சித்தர் கோயிலாகும். இதனை அமாவாசைக் கோயில் என்றும் கூறுவர். காலங்கிநாதர் எனும் சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள அற்புதத் திருக்கோயிலாகும். இக்கோயிலின் கல் கட்டடம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது.

பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர். எங்களுக்காக சீனாவிலிருந்து வந்த இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம்.

மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.

இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான். கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது.

அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங்கிரியையும், வடக்கே பெரும்பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்குமண்டலமாகும்.

சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.

பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்
சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்
முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்
மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.

(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்)

இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி பொன்னிநதி என்று அழைக்கின்றனர். அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கருஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர். அதியமான் அவ்வைக்குத்தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும்.
அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.

கஞ்சம் என்னும் சொல்லுக்கு பொன் என்று பொருள். (வேறு பொருள்களும் உள்ளன.) எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு பொன்னி நதி என்று பெயர் பெற்றது.

இந்த மலைப்பகுதியில் உள்ள கனிமத்திலிருந்தும் மூலிகைச் சாற்றினைக் கொண்டும் அந்தக் காலத்தில் பொன் தயாரித்திருக்கிறார்கள். அந்தப் பகுதி பொன்னகர் என்றும்; இப்பொன்னை மாற்றுரைத்துப் பார்த்த இடம் ஏழு மாத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றுள் ஏழு மாத்தனூர் என்னுமிடம் இன்றும் இந்த கஞ்சமலைக்கு அருகில் உள்ளது.

கஞ்சமலையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான கனிம வளங்கள் உள்ளன. இதில் அதிகமாகக் காணப்படுவது இரும்புத் தாது. இந்த இரும்புத் தாதுகளைப் பொன்னாக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் இங்கு உள்ளன. இரும்புத் தாதுவின் சக்தியால்தான் இங்கு காணப்படும் மூலிகைகள் கருமை நிறத்தில் இருப்பதுடன், மற்ற மலைப் பிரதேசங்களில் கிடைக்கும் மூலிகைகளைவிட சத்தும் சக்தியும் அதிகம் கொண்டவை யாகத் திகழ்கின்றன. இதனால்தான் கஞ்ச மலைப் பகுதியை கருங்காடு என்றார்கள். இங்கு விளைந்த கரு நெல்லியைத்தான் மன்னன் அதியமான் ஔவை யாருக்கு அளித்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

பராந்தகச் சோழன், தில்லை நடராஜப் பெருமானின் கோவிலுக்குப் பொன் வேய்ந்ததாக வரலாறு சொல்கிறது. அந்தத் தங்கத்தைக் கொடுத் தது இந்த கஞ்சமலைதான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்வர். அது மட்டுமல்ல; மாவீரன் அலெக்ஸாண்டருக்கு போரஸ் என்ற புருஷோத் தமன் வாள் ஒன்றைப் பரிசளித்தான். அந்த வாள் இந்தக் கஞ்சமலையில் கிடைத்த இரும்பினால் உருவாக்கப்பட்டது என்றும் வரலாற்றில் குறிப்பு உள்ளது.

கஞ்சம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு. கஞ்சன் என்பது பிரம்மதேவனின் பெயர் களுள் ஒன்று. தாமரைக் கருவினில் உதித்ததால் பிரம்மனின் பெயர்களுள் ஒன்றாயிற்று கஞ்சம். மேலும் இம்மலை பிரம்மதேவனால் உண்டாக்கப்பட்டது என்று புராணம் கூறும்.

முன்னொரு காலத்தில் சித்தர்கள் கற்ப மூலிகை எங்கு கிடைக்கும் என்று தேடி அலைந்தார்கள். அவர்கள் முயற்சி வீண் போனதால் கஞ்சன் என்ற திருப்பெயர் கொண்ட பிரம்மதேவனை நோக்கி பலகாலம் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்தினைப் போற்றிய பிரம்மதேவன் சித்தர்கள் விரும்பும் அனைத்து மூலிகைகளும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு அருள்புரிந்தார். அதன்படி ஓர் அற்புதமான மலையைப் படைத்தார். அந்த மலையில் விருட்சங்கள், மூலிகைச் செடிகள் தோன்றி காடாகக் காட்சி தந்தன. அந்தக் காட்டிற்குள்ளும் மலைச்சரிவிலும் மலை இடுக்குகளிலும் பல அரிய மூலிகைகளை பிரம்மன் தோற்றுவித்தார்.

இம்மலையில் கருநெல்லி மரம், வெள்ளைச் சாரணச் செடி, நிழல் சாயா மரங்கள், இரவில் ஒளிவீசும் ஜோதி விருட்சங்கள், உரோமத் தருக்கள், கனக மரங்கள், உடும்புகள் உண்ணாச் சஞ்சீவி கள், ஆயுதங்களால் ஏற்படும் காயத்தினை உடனே குணப்படுத்தும் சல்லிய கரணி, மனித உடலில் உள்ள எலும்புகள் முறிந்தாலும் உடைந்தாலும் துண்டுபட்டாலும் உடனே இணைக்கக் கூடிய சந்தான கரணி, வெட்டுக் காயத்தால் ஏற்படும் தழும்பால் விகாரமாகத் தெரியும் முக அமைப்பை மீண்டும் அழகு படுத்தக் கூடிய சாவல்ய கரணி, உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் மீண்டும் உயிர் பெற்று வாழக்கூடிய அமுதசஞ்சீவி கரணி உள்ளிட்ட பல அற்புதமான மூலிகை கள், விருட்சங்கள், கிழங்குகள், வேர்கள் என நிரம்பியிருக்கும் என்றும்; அம்மூலிகைகளைக் கொண்டு கற்ப மருந்தினைச் செய்து பலன் பெறலாம் என்றும் பிரம்மன் அருளியதாக "கரபுரநாதர்' புராணம் சொல்கிறது.

பிரம்மன் தோற்றுவித்த இந்த அற்புதமான கஞ்சமலையில் ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள் இன்றும் உள்ளன. அந்த மூலிகைகளை நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, தகுந்த மந்திரம் சொல்லி காப்புக்கட்டி, வழிபட்டு, சாப நிவர்த்தி யானதும் அந்த மூலிகையிடம் சம்மதம் பெற்று அதனைப் பறித்து, செடியாக இருந்தால் வேர் அறுபடாமலும், கத்தியால் காயப்படுத்தாமலும் தகுந்த முறையில் அதனைக் கொண்டுவந்து நல்ல நாள் பார்த்துப் பயன்படுத்தினால், ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இவ்வளவு சிறப்புப் பெற்ற கஞ்சமலை சேலத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள் அந்த ஊர் மக்கள். மலை அடிவாரத்திலிருந்து காலை ஆறு மணியளவில் புறப்பட்டால் கோவிலை அடைய பத்து மணிக்கு மேல் ஆகுமாம். உடல் வலிமை உள்ளவர்கள் மட்டும் கஞ்சமலைமேல் உள்ள கோவிலுக்குச் செல்கிறார்கள்.

அற்புதங்கள் நிறைந்த இந்தக் கஞ்சமலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இந்த மலைக்கு மேற்குப் பகுதி யில்தான் புகழ் பெற்ற சித்தேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. சித்தேஸ்வரர் என்றதும் கருவறையில் சிவலிங்கம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இங்கு வாழ்ந்த- தற்பொழுதும் வாழ்ந்து கொண்டி ருக்கிற சித்தர்களில் ஒருவருக்குத்தான் கோவில் கட்டி அவர் திருவுருவை ஸ்தாபித்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மூல ஸ்தானத்தில்அருள்புரியும் சித்தேஸ்வரரின் திருவுருவம் ஓர் இளம் யோகியின் திருவுருவம் ஆகும். சின்முத்திரையுடன் தவக்கோலத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவர் அருள்பாலிக் கும் கருவறைக்கு அருகில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் நந்தியெம் பெருமான் எழுந்தருளி உள்ளார்.

மூலன் என்ற பெயர் கொண்ட சித்தர் ஒருவர் தன் தேகத்தை காயசித்தி முறையில் இளமை யாக்கிக் கொள்ள தன் வயதான சீடருடன் கஞ்ச மலைக்கு வந்தார். தன் சீடரிடம் சிற்றோடைக்கு அருகில் சமையல் செய்யச் சொல்லிவிட்டு, காயகல்ப மூலிகையைத் தேடிச் சென்றார். குருவின் கட்டளைப்படி அந்தச் சீடர் சமையல் செய்ய ஆரம்பித்தார். சோறு கொதித்துப் பொங்கியது. அப்போது சுற்று முற்றும் பார்த்த சீடர் ஒரு செடியைப் பிடுங்கி, அருகில் ஓடிய நீரோடையில் அந்தச் செடியைக் கழுவி சுத்தம் செய்து, அகப்பை போல் சோற்றினைத் துழாவினார். பொங்கிய சோறு அடங்கியது. ஆனால், சோறு கறுப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்டு அஞ்சிய சீடர், குரு வந்தால் கோபித்துக் கொள்வாரே என்ற அச்சத்தில் அந்தச் சோற்றினைத் தான் உண்டு விட்டு, புதிதாக சோறு சமைத்தார். சிறிது நேரம் கழித்து குரு அங்கு வந்தபோது சீடரைக் காண வில்லை. அங்கு ஓர் இளைஞன்தான் நின்று கொண்டிருந்தான். அந்த இளைஞனிடம், ""இங்கிருந்த முதியவர் எங்கே?'' என்று குரு கேட்டார். தன் குருவின் காலடியில் விழுந்து வணங்கிய சீடர், " "குருவே, என்னை அடையாளம் தெரியவில்லையா? நான்தான் உங்கள் சீடன்'' என்றார்.

அதிசயமுற்ற குரு, "நீ இப்பொழுது மிகவும் இளமையாகக் காட்சி தருகிறாயே, எப்படி?'' என்று விவரம் கேட்டார். சீடர் சோறு பொங்கும் போது நடந்த நிகழ்ச்சியைக் கூறினார்.

அதைக் கேட்ட குரு, "அப்படியென்றால் அந்த மூலிகைச் செடி எப்படி இருந்தது? அந்தச் செடியின் பகுதி எங்கே?'' என்று கேட்டார்.

"குருவே, தாங்கள் கோபித்துக் கொள்வீர்கள் என்று எண்ணி அந்தச் செடியை உடனே அடுப் பில் போட்டு எரித்து விட்டேன்'' என்றார் சீடர்.

"எந்த மூலிகையைத் தேடி வந்தேனோ அது இங்கேயே இருப்பதை அறியாமல் போனேனே' என வருந்தினார் குரு. சில அரிய மூலிகைகள் தங்களைப் பறிக்க வருகிறார்கள் என்பது தெரிந்த தும், கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் பதுங்கிக் கொள்ளும். ஆனால், ஏதுமறியாத சீடர் திடீரென்று அந்த காயகல்ப மூலிகைச் செடியைப் பறித்து விட்டதால் இந்த அற்புதம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் குரு.

தன் சீடரை அழைத்த குரு, "நீ உண்ட சோற்றினை என் கையில் கக்கு'' என்றார். சீடனும் சிரமப்பட்டு தான் உண்ட சோற்றைக் கக்க, அதனை உண்டார் குரு. உடனே முதுமை மாறி இளம் உருவத் தைப் பெற்றார். இவ்வாறு மூலனும் அவரது சீடரும் இளமை பெற்றதால், இத்தலத்திற்கு அருகில் உள்ள ஊர் "இளம் பிள்ளை' என்று பெயர் பெற்று இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.

இத்தலத்தில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்தேஸ்வர சுவாமி, திருமூலரின் சீடரான கஞ்சமலை சித்தர் என்று அழைக்கப்படும் காலங்கி நாதர் என்று சொல்கிறார்கள். சித்தேஸ்வரராகிய காலங்கி நாதர் பறக்கும் தன்மை பெற்றவர். சித்து நிலையில் தன் சரீரத்தை இரும்புக்கல் தாதுவாக்கி, காந்த நீர் சுழற்சியில் உள்ளிட்டு, ஓட்டகதியில் மின்காந்த சக்தியாக இன்றும் கஞ்சமலையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

சுமார் அறுபது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மலைப்பகுதியில் எங்கு தோண்டினாலும் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது.

இத்திருக்கோவில் உள்ள பகுதியில் புனிதத் தீர்த்தக் குளங்கள் உள்ளன. நாம் முதலில் இப்பகுதியில் நுழைந்ததும் இரண்டு தீர்த்தக் கிணறுகளைக் காண்கிறோம். இதனை ராகு- கேது தோஷம் நீக்கும் தீர்த்தக் குளம் என்று சொல்கிறார்கள்.

இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை வாடகைக்குத் தருகிறார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப் படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மலையிலிருந்து சுனை வழியாக ஊற்று நீர் வருகிறது என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சி அன்று மக்கள் கூட்டம் இங்கு நிறைந்து காணப் படுகிறது.

இக்கோவிலின் கருவறைக்குப் பின் படிக்கட்டுகள் அமைந்த ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. படிக்கட்டுக்கு அருகில் சுதையாலான பெரிய நந்தி ஒன்றும் உள்ளது. இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படு கின்றன. அங்கு விற்கப்படும் உப்புப் பொட்டலங் களை வாங்கி நம் தலையில் வைத்துக் கொண்டு, பிறகு தலையைச் சுற்றி இந்தக் கிணற்றில் எறிந்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல் வரவேண்டும்.

ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோது கிறது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெறு கிறது. இக்கோவிலுக்கு அருகே சிற்றோடை உள்ளது. இது எந்தக் காலத்திலும் வற்றாமல் தெளிந்த நீராக ஓடிக் கொண்டிருக்குமாம். இந்த ஓடைக்கு அருகில் பல நாழிக் கிணறுகள் உள்ளன. இக்கிணறுகளில் கைக்கு எட்டும் ஆழத்திலேயே நீர் உள்ளதால், வாளிகள் மூலம் நீர் எடுத்துக் குளிக்கிறார்கள். 

இக்கோவில் வளாகத்தில் உள்ள திறந்த வெளி மண்டபத்தில் ஒரு பெரிய மேடை உள்ளது. அந்த மேடையில் நாகர் சிலைகள் பல உள்ளன. மேலும், சர்ப்பக் குடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் உள்ளார். அதேபோல் சர்ப்பக் குடையின்கீழ் நான்கு கரங்களுடன் முருகப் பெருமான் தனித்து நிற்கிறார். இந்தச் சிலைகள் எல்லாம் நாக தோஷங்கள் நீங்குவதற் காக பக்தர்கள் கோவில் குருக்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப் பட்டவையாம். மேலும் இத்தலம் பாம்பாட்டிச் சித்தரின் அருள் பெற்ற தாகவும் சொல்வர்.

இத்தலத்தில் அருள் புரியும் சித்தேஸ்வரரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.

கஞ்சமலை அடி வாரத்தில் உள்ளது நல்ல ணம்பட்டி என்னும் ஊர். இங்குள்ள சிறுவர் கள் மாடுகளை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்வது வழக்கம். பொழுதுபோக்கிற்காக அவர்கள் விளையாடும்போது, தோற்றவன் தலையில் வென்றவன் குட்டுவான். அப்போது ஒரு புதிய சிறுவன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டான். தினமும் அவனே வெற்றி பெற்று தோற்றவர்கள் தலையில் குட்டுவான். மாடு மேய்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்த உணவினை நண்பகலில் சாப்பிடும்போது, அந்தப் புதிய சிறுவன் அங்கிருந்து விலகிச் சென்று மாடுகளின் மடியில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சிக் குடிப்பான். இதனைக் கண்ட ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, மறுநாள் இந்தக் காட்சியை மறைந்திருந்து பார்த்தார் அவர். அந்தச் சிறுவன்மாடுகளின் மடியில் பால் குடிப்பதைக் கண்டதும், கோபமுற்ற அவர் பக்கத்திலிருந்த கயிற்றினால் அவனை அடித்தார். அடிபட்ட சிறுவன் இப்பொழுது கருவறை உள்ள இடத்தில் தவக்கோலத்தில் அமர்ந் தானாம். பல நாட்கள் தவத்தில் அமர்ந்த அந்தச் சிறுவன்தான் சித்தேஸ்வர சுவாமியாகக் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

அன்று கயிற்றால் அடிபட்ட நிகழ்ச்சியைக் கொண்டு இங்கு சித்திரை மாதத்தில் விழா நடைபெறுகிறது. அந்தச் சிறுவனை அடித்தவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் விரதம் மேற் கொண்டு, விழா சமயத்தில் முடி எடுத்து நீராடி, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார். அப்போது அவரை மெல்லிய கயிற்றி னால் அடிப்பார்கள். அடிப்பவர்கள், அடிபடுபவரி டம் எப்பொழுது மழை பெய்யும் என்பது போன்ற பல கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர் பதில் கூறுவார். அவரது அருள்வாக்கு பலிக்குமாம். இந்த நிகழ்ச்சிதான் இந்த விழாவின் உச்சகட்டம் என்கிறார்கள்.

சித்திரை மாதப் பௌர்ணமி அன்றும் அதற்கு அடுத்த நாளும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சமையல் செய்து அன்னதானம் வழங்குகிறார்கள். வாழை இலைக்குப் பதில் பாக்கு மட்டை பயன்படுத்தப்படுகிறது.

சித்தேஸ்வர சுவாமி கோவிலுக்கு கிழக்கே ஒரு சிறிய மலை உள்ளது. இதனை தியான மலை என்கிறார்கள். இம்மலையின் மேல் ஏறுவதற்குப் பாதை இல்லை. கரடுமுரடான பகுதியில் சிரமப் பட்டு ஏறினால் சுமார் பதினைந்து நிமிடங்களில் மேலே போய்விடலாம். அங்கே சுமார் பத்தடிக்கு பத்தடி அளவில் சமதளம் உள்ளது. அதன் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதனை தியானப் பாறை என்பர். அந்தத் தியானப் பாறைக்கு எதிரில் ஒரு சிறிய கோவில் உள்ளது. அதில் சந்தன மகாலிங்க சுவாமி சிறிய திருவுருவில் எழுந்தருளியுள்ளார். அவரைச் சுற்றி சில தெய்வங் களும் உள்ளன. அருகில் தல மரமான சந்தன மரச்செடி உள்ளது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அந்தத் தியானப் பாறையில் யாராவது ஒரு சித்தர் அமர்ந்து விடியும்வரை தியானம் செய்வது வழக்கமாம். புகை வடிவில் உருவில்லாத வெள்ளை நிற நிழல்போல் காட்சி தருவதை அந்த ஊர் மக்களும் பக்தர்களும் அடிவாரத்திலிருந்து தரிசித்திருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் யாரும் அந்த மலைமீது ஏறிச் செல்வதில்லை. காலை ஆறு மணிக்கு மேல் அங்கு சென்று பார்த்தால், சித்தர் அமர்ந்து தவம் செய்த அந்தப் பாறையிலிருந்து ஒரு மெல்லிய ஒலி எழும்பு வதையும் அந்தப் பாறை லேசாக அதிர்வது போலவும் இருக்கும் என்கிறார்கள். இந்த நிலை காலை ஏழு மணி வரை- அதாவது சூரிய ஒளி அந்தப் பாறைமீது விழும்வரை நீடிக்குமாம். இந்தத் தியானப் பாறை உள்ள மலைமீதிருந்து பார்த்தால் கஞ்சமலையின் முழுத்தோற்றத்தையும் தரிசிக்கலாம். இங்கும் மலைமேல் அன்னதானம் நடைபெறுகிறது.

இன்னொரு அதிசயமான செய்தியும் உண்டு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கஞ்சமலையில் வகிக்கும் சித்த புருஷர்கள் ஜோதி வடிவில் கஞ்சமலையை வலம் வருவதைத் தரிசிக்கலாம். இரவு பதினோரு மணிக்கு மேல் கஞ்சமலையின் மேல்பகுதியில் சிறிய அளவில் நட்சத்திரம்போல் ஜோதிகள் காணப்படுமாம். அவை மெதுவாக நகர்ந்து மலையை வலம் வரும் என்று சொல்லப்படுகிறது. எல்லாரது கண்களுக்கும் ஜோதி தென்படாதாம். இந்தத் தரிசனத்தைக் காண்பவர்கள் பாக்கியவான்கள்.

அற்புதமான உயிர்காக்கும் மூலிகைகள்- குறிப்பாக காயகல்ப மூலிகைகள் நிறைந்த வியத்தகு செய்திகளைக் கொண்ட இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல.

இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் நிறைந்து காணப்படுவதால்தான், இந்த மலைக்கு அருகே சேலம் இரும்பாலை (உருக்காலை) அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சமலைச் சித்தர்.

பரிபூரணானந்த போதம்-சிவ பரப்பிர்மமான சதாசிவ பாதம்உரிதாம் பரம் பொருளை உள்ளு-மாயம் உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளு அரிதான சிவநாமம் விள்ளு-சிவன் அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு துச்சமுசார விசாரம்-அற்பச் சுகமது துக்கம தாம்வெகு கோரம் நிச்சய மானவி சாரம்-ஞான நிர்மல வேதாந்த சாரமே சாரம். முழுமையும் பூரணமும் ஆனந்தமாகிய அறிவு சிவமாகிய பரப்பிரம்மம் ஆகிய சதானந்தத்தின் பாதமாகும், பரம்பொருளையே நினைத்து மாயத்தாலாகிய பிரபஞ்சத்தை நீக்கு. சிவ நாமத்தையே சொல்லுக. சிவனடியார்களுக்குப் பணி செய்வதை அன்பாய் செய். நிலையில்லாதவற்றை விசாரித்து நிற்பது மிகச் சிறிய சுகம். அது துக்கமாக மாறி வெகு கோரமாய் ஆகும். நிலையான பொருள் பற்றி விசாரித்தால் ஞானமும் நிர்மலமும் தரும். வேதாந்தத்தின் சாரமே உயர்வுக்கு வழியாகும். கற்பனையாகிய ஞாலம்-அந்தக் கரணங்களாலே விளந்த விசாலம் சொற்பன மாம் இந்த்ரசாலம்-அன்று தோன்றி விட்டாலது சூட்சானுகூலம். அற்பமதானப் பிரபஞ்சம்-அது அனுசரித் தாலே உனக்கிது கொஞ்சம் நிற்பது அருள்மேவி நெஞ்சம்-அன்று நிகரில்லை நிகரில்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம் ஆங்காரத் தால்வந்த கேடு-முதல் ஆசையைக் கட்டோடே அப்பாலே போடு தாங்காமல் ஆனந்தவீடு-அன்று தாக்கும் மனோலயம் தானாகக்கூடு. இந்த உலகம் கற்பனையானது. மனம் முதலிய அந்தக் காரணங்களால் விரிவான உலகை உணரலாம். நிகழ்காலம் முதலிய கனவு காண்பதாகிய இந்திரசாலமே. அதில் அறிவு தோன்றினால் அது சூக்குமமாகிய துணையாகும் பிரபஞ்சமே அற்பமானது என்பதை அதை எண்ணி உணர்வதால் அது சிறிது தெளியும். நெஞ்சமோ கடவுள் அருளுக்காகவே காத்துள்ளது. அதனால் மெய்ஞ்ஞானம் நிகரற்றதாக விளங்கும். ஆங்காரத்தால் வந்தது கெடுதி. 


ஆகவே முதலில் ஆசையை விடுக. அப்போது ஆனந்த வீடு உன் மனதில் பொருந்தும். தத்துவக் குப்பைகள் ஏது-சித்தி சாத்திர மான சடங்குகள் ஏது பத்தி யுடன் மறவாது-குரு பாதத்தைக் கண்டாற் தெரியும் அப்போது. தூராதி தூரங்கள் இல்லை-அத்தைத் தொட்டுப் பிடிக்க என்றால் வெகு தொல்லை காரண தேசிகன் சொல்லை-நம்பிக் கருத்தில் நிறுத்தியும் காணலாம் எல்லை ஆணவத்தால் வந்த காயம்-அதில் ஐவரிருந்து தொழில்செய்யும் ஞாயம் காணவமாம் போகும் மாயம்-நன்றாய்க் கைகண்ட சூத்திரம் சொன்னேனுபாயம். தத்துவமாகிய குவியல்கள் எது. சித்திக்கான சாத்திரம் சடங்கு எது. பத்தியுடன் குரு பாதத்தை மறவாமல் தொழுது வந்தால் எல்லாம் விளங்கும். தூர தூரமாகத் தெரிவதெல்லாம் உண்மையில்லை. அதை தொட்டுப் பிடிப்பது என்றால் தொல்லை. அறிவு தரும் குருவின் சொல்லை நம்பிக் கருத்தில் வைத்தால் அத்தூரங்கள் ஓர் எல்லையில் அகப்படும். ஆணவம் மறுபிறப்பையும் இந்த உடலையும் தந்தது. ஐந்து புலன்கள் எல்லாவற்றையும் நடத்துகிறது. அறிவால் காண நேர்ந்தால் மாயம் கழியும். நல்ல சூத்திரத்தால் உபாயம் சொன்னேன். மூடர் உறவு பிடியாதே-நாரி மோக விகாரத் தால் நீ மடியாதே ஆடம்பரம்படியாதே-ஞான அமுதம் இருக்க விஷம் குடியாதே. தான் என்று வாது கூறாதே-பேசி தர்க்கங்கள் இட்டுச்சள் என்று சீறாதே ஊனென்ற பாசம் மாறாதே-போனால் உன்னானை உன்மனஞ் செத்துந் தீராதே வந்த பொருளைத் தள்ளாதே-நீயும் வாராததற்கு வீணாசை கொள்ளாதே சிந்தை வசமாய்த் துள்ளாதே-சும்மா சித்திரம் போலிருந்து ஒன்றும் விள்ளாதே. தேக பாச பவபந்தம்-அப்பொருள் சிற்றின்ப மானது சிச்சீர்க் கந்தம் பாகமது ஆனவே தாந்தம்-பொருள் பாவித்துப் பார்க்கில் உனக்கிது சொந்தம். அறிவிலாதார் உறவைக் கொள்ளாதே. மங்கையர் மோகத்தால் மடியாதே. ஆடம்பரமாக இருக்காதே. ஞானமாகிய அமுது இருக்க நஞ்சைக் குடிக்காதே. தான் என்று அகந்தையாய் வாதம் செய்யாதே. தர்க்கம் பேசிச் சண்டையால் சீறாதே. உடம்பின் பாசத்தை மறுக்காதே. உடம்பு போனால் உன் மேல் ஆணை உன் மனமும் செத்து விடும் எதுவும் தீர்வாகாது. 


தானாக வந்த பொருளைத் தள்ளி விடாதே. கிடைக்காத ஒன்றுக்கு வீண் ஆசை கொள்ளாதே. சிந்தை வசமானதாகத் துள்ளாதே. சித்திரம் போல் இருந்து மவுனம் செய்க. தேகத்துக்குரிய தொடர்புகள் பாவமான தொடர்புதருவது சிற்றின்பமாகும். அது மிகச் சிறிய வாசனையால் வந்தது. பாகம் செய்யப் பெற்ற வேதாந்தத்தைப் பொருளாகப் பாவித்து உணர்ந்தால் உன் சொந்தம் உனக்கு விளங்கும். வஞ்சியர் ஆசை ஆகாதே-அந்த மயக்கமானாற் கொஞ்சமட்டிற் போகாதே அஞ்சியமன்கைச் சாகாதே-கெட்ட ஆசா பாசமாம் நெருப்பில் வேகாதே. கல்வி மயக்கங் கடந்து-எல்லாம் கற்றோம் என்று எண்ணுங் கசட்டைத் தொலைத்து சொல்வெப்பினாலே கிடந்து-இரு சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து. ஓடித் திரியும் கருத்து-அதை ஓடாமல் கூட்டிப் பிடித்துத் திருத்து நாடிக் கொண்டு அம்பைப் பொருத்து-அந்த நாதந்த வெட்ட வெளிக்குள் இருத்து. சாண்வயிற்றால் அலையாதே-நிதம் சஞ்சலப்பட்டுக் கொண்டே மலையாதே ஆணவத்தால் உலையாதே-உனக்கு ஆனந்த முத்தி அது நிலையாதே. பெண்கள் மீதான் ஆசை வழியில் போகாதே. அந்த மயக்கம் எளிதில் மாறாது. எமன் கையில் அஞ்சிச்சாக நேரும். ஆசாபாசங்கள் நெருப்பிலும் வேகாது. கல்வியாகிய மயக்கத்தையும் எல்லாம் கற்று விட்டோம் என்ற கர்வத்தையும் தொலைத்து நாதமாகிய வெப்பத்தில் இடா பிங்களா எனும் சூக்குமத்தில் ஆசை கொள்க. எங்கும் திரியும் கருத்தை ஓடாமல் கட்டி வைத்து அம்புபோல் நாதந்த வெளியில் மனத்தைச் செலுத்து. சாண் வயிற்றுப் பசிக்காக அலையாதே. எதற்காகவும் மனம் வருந்தாதே. ஆணவம் கொள்ளாதே. இதனால் உனக்கு முத்தி நிலைக்காது. 

அபிமானியாகிய சீவன்-அவன் அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான் தபம் நினைந்தால் போதம் சார்வான்-நிலை சார்ந்துகொண்டால் சத்திரூபமும் ஆவான் நற்குரு சொன்னதே சொல்லு-தம்பம் நட்ட மென்றால் வன்னி நிலைமையிலே நில்லு தற்சமயங்களை விள்ளு-உண்டு தன்மய மாகவே தானே நீ கொள்ளு துன்ப இன்பங்களைத் தொட்டு-அந்தத் தொந்தங்கள் எல்லந்துருசு அறச் சுட்டு பின்பு பாசத்தைக் கைவிட்டு-ஒன்று பேசாமல் அந்தப் பெருமையை விட்டு. பேச்சினால் என்னென்ன தோணும்-சும்மா பேசப் பேசப் பிழைஅல்லோ வாச்சுதலால் அம்பு பூணும்-நல்ல மாசற்ற விசாரணை வேணும். எதிலாவது பற்று மிகக் கொண்ட சீவன் அறியாமையால் அழியும். தவத்தை நினைத்தால் அறிவு வந்து சேரும். நல்ல நிலையை ஏற்றால் சத்தி வடிவமும் உண்டாகும். நல்ல குரு சொன்னதே சொல்லாகும் தீத்தம்பத்தை உடலுக்குள் நாட்ட குண்டலினி நிலையை விட்டுப் பிரியாது வேண்டும். நிலையான சமயத்தில் இருந்து கடவுள் மயமாகி நில். இன்ப துன்பங்கள் இரண்டையுமே சுட்டு நீக்கு. பிறகு பாசத்தை கைவிட்டு மவுனத்தில் தன் பெருமையை விட்டு நீக்கு. பேசிக் கொண்டே இருப்பதால் பிழைகள் தாம் உண்டாகும் மாசற்ற ஞானத்தைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டும். அநித்தியமானது தேகம்-அதில் ஆசையும் ஒன்றால் அடங்காது மோகம் தனித்திருந்தால் அந்தபோகம்-ஒன்று தானாகி நிற்பதுவே சிவ யோகம். விரும்பாசைக்கு இடங்கள் கொடாதே-காய வேதனைக்குள்ளேநீ கட்டுப்படாதே திரும்பச் செனனம் எடாதே-குரு தேசிகர் பாதத்தில் அன்பு விடாதே கோடான கோடி தவங்கள்-அந்தக் கோவிலைச் சுற்றிச் செபிக்குஞ் செபங்கள் பாடான தல்லோ பவங்கள்-இது பண்னுமுன் நண்ணும் துன்ப அவலங்கள் அந்தக் கரணவிலாசம்.

அதை யாராலும் தள்ளக் கூடாது பிரயாசம் தொந்தித்து நிற்பதே பாசம்-அதிற் தோன்றாமற் தோன்றுஞ் சுயம் பிரகாசம் நாமசொரூபமே சித்தி-அதை நாடித் தெளிந்து கொண்டால் அல்லோ முத்தி நேமசொரூபமே வித்து-எங்கும் நிச்சய மாகும் நிரந்தர வத்து. இந்த உடல் நிலையானது அல்ல. அதில் ஆசை வந்தால் மோகம் அதிகமாகும். தனித்து மவுனமிருந்தால் இன்பம். பரம்பொருளுடன் ஒன்றி நிற்பது சிவயோகம். ஆசைக்கு இடம் தராதே. உடல் வேதனைக்குள் சிக்காதே. மறுபிறவி எடுக்காதே. குருவின் பாத அன்பை விடாதே. கோடித் தவங்கள், கோவிலைச் சுற்றி ஜெபிக்கும் ஜெபங்கள் ஆகியவை பரிகாரமாகாது. அவலங்களே மிஞ்சும். அந்தக் கரணங்களை விரித்தால் யாரும் தடுக்க முடியாது. தொடர்பு விடாது பாசம். அதனுள் சுயமான ஆன்ம ஒளியும் மறைந்திருக்கும். நாமத்தை இறை வடிவமாகக் காண்பது சித்திக்கு வழி. அதைநாடித் தெளிவு கொண்டால் முத்தி வரும். நியமங்களே விதையாகும். கடவுள் எங்கும் நிலையாய் உறுதியாய் நிலைத்திருப்பதை உணர்க. 
Home Pathinettu Siththargal Previous                                                                Next

No comments:

Post a Comment